கொரோனா தொற்றுநோய் தெற்காசிய தொழிலாளர்களுக்கு இருண்ட யுகம்

0
Ivory Agency Sri Lanka

கொரோனா தொற்றுநோயின் பேரழிவு விளைவுகளால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர்களை பாதிக்கும் என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 8 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட உலக வங்கியின் அரை ஆண்டு பிராந்திய அறிக்கை, முறைசாரா துறை தொழிலாளர்கள் பேரழிவின் சுமைகளை தாங்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது.

இந்த தொற்றுநோய் மில்லியன் கணக்கான தெற்காசியர்களை தீவிர வறுமையில் தள்ளும் என அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் பொருளாதார இலக்கு தோல்வியடைந்ததா? தோல்வியடையச் செய்யப்பட்டதா? என உலக வங்கியின் பிராந்திய அறிக்கை, கேள்வி எழுப்புகிறது, பிராந்தியத்தில் பொருளாதார வீழ்ச்சி எதிர்பார்த்ததை விட கூர்மையாக இருக்கும் என கணித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, தெற்காசிய பிராந்தியத்தில் ஆண்டு வளர்ச்சி 2020 ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், முன்னைய ஐந்து ஆண்டுகளில் இது 6 சதவீதமாக காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராந்தியத்தின் மிகப்பெரிய நாடான இந்தியாவின் பொருளாதாரம், 2020 ஆம் நிதியாண்டில் 9.6 சதவீதமாக குறைவடைந்துள்ளதோடு, 2021ஆம் ஆண்டில் பிராந்திய பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக மாறும் எனவும் கணித்துள்ளது.

எவ்வாறாயினும், மக்கள்தொகை வளர்ச்சியைப் பொறுத்தவரை, பிராந்தியத்தின் தனிநபர் வருமானம் 2019 மதிப்பீடுகளில் 6%ற்கும் குறைவாகவே இருக்கும், இது சர்வதேச தொற்றுநோயால் ஏற்படும் பொருளாதாரத்திற்கு நீடிக்கும் சேதத்தை ஈடுசெய்யும் எனவும், எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியை ஈடுசெய்யாது என்பதைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னைய மந்தநிலையை அடுத்து முதலீடு மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு பொருளாதாரத்தை மந்தநிலைக்கு தள்ளியுள்ளது.

இதற்கு நேர்மாறாக, உலக வங்கியின் அரை ஆண்டு பிராந்திய அறிக்கை, பாரம்பரியமாக தெற்காசியாவின் கோரிக்கையின் முதுகெலும்பாகவும், பொருளாதார நுகர்வுக்கான முக்கிய குறிகாட்டியான 10%ற்கும் அதிகமான தனிப்பட்ட நுகர்வு வீழ்ச்சியிலும் வறுமை விகிதங்களை மேலும் உயர்த்த வழிவகுத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

வெளிநாட்டு இடம்பெயர்வு, அல்லது பணம் அனுப்புவது குறைந்து வருவது, சில நாடுகளில் வாழ்வாதார இழப்பை துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

“கொவிட்19 இன் போது தெற்காசிய பொருளாதாரங்களின் சரிவு, எதிர்பார்த்ததை விட குறைவாக காணப்படும் எனவும், சிறு தொழில்கள் மற்றும் முறைசாரா துறை ஊழியர்களுக்கு மோசமான சூழ்நிலை, திடீர் வேலை இழப்பு மற்றும் வருமான இழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என உலக வங்கியின் தெற்காசியா பிராந்தியத்தின் பிரதித் தலைவர் ஹார்ட்விக் ஷெபர் கூறியுள்ளார்.

உடனடி நிவாரண முயற்சிகள் தொற்றுநோயின் தாக்கத்தை நடுநிலையாக்கியுள்ள நிலையில், அரசாங்கங்கள் தங்களது முறைசாரா துறைகளில் ஆழமாக இருக்கும் பாதிப்புகளை விவேகமான கொள்கைகள் மூலம் நிவர்த்தி செய்ய வேண்டும்.

உலக வங்கியின் கூற்றுப்படி, தெற்காசியாவில் முக்கால்வாசி தொழிலாளர்கள் சுற்றுலா, சில்லறை விற்பனை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட முறைசாரா தொழில்களை நம்பியுள்ளனர், அவை குறிப்பாக கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

கொவிட்19 இன் எதிர்பாராத அதிர்ச்சியால் முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும் என அறிக்கை மேலும் எச்சரிக்கிறது.

உயரும் உணவு விலைகளால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா 19 வருமானத்தில் கூர்மையான வீழ்ச்சியின் மத்தியில் இருக்கும் பல முறைசாரா தொழிலாளர்களுக்கு மற்றொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி இரேகை

“கொரோனா 19 தெற்காசியாவை பல வருடங்களுக்கு பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, பொருளாதாரங்களில் நீடித்த வடுக்களை ஏற்படுத்தும்” என தெற்காசிய பிராந்தியத்தில் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஹான்ஸ் டிமர் கூறியுள்ளார்.

“ஆனால் எளிதில் அதனை மீட்க வழிவகுக்கும் ஒரு வெள்ளி இரேகை காணப்படுகின்றது. உலகப் பொருளாதாரம் மேலும் மேலும் டிஜிட்டல் ஆகும்போது, அதிக கேள்வியை ஏற்படுத்தும், தொழில்நுட்ப சேவைகள் மற்றும் சிறப்பு சுற்றுலா துறைகளின் ஒப்பீட்டு நன்மைகள் காரணமாக, தென் ஆசியாவின் உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் எதிர்கால பங்களிப்பை மேம்படுத்தும் புதுமைகளுக்கு இந்த தொற்றுநோய் வழிவகுக்கும். “

Facebook Comments