முதலீட்டு வலய பிரச்சினைகள் குறித்து ஆராயும் செயலணியில் ”பெண்கள் இல்லை” (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

பெரும்பான்மையான பெண்கள் பணியாற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, கொரோனா தொற்று தலைத்தூக்கிய சந்தர்ப்பத்தில் அமைக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய செயலணியில் பெண் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படவில்லை இல்லை என்பது தெரியவந்துள்ளது,

இந்த குழுவானது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிற்சங்கங்களால் உருவானது என முன்னணி சுதந்திர வர்த்தக வலய செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“ஏனென்றால் இதற்கான ஒரே நிறுவனம் செயலணியே. அந்த செயலணியில் பெண்களுக்கு தனித்தனி பிரதிநிதித்துவம் இல்லை. முதலாளிகளின் சங்கங்கங்களைப்போல் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் இதைப் புதுப்பிக்குமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். ஊரடங்கு காலத்திலேயே இந்த செயலணி உருவாக்கப்பட்டது. 14 தொழிற்சங்கங்களில் 4 தொழிற்சங்கங்கள் மாத்திரமே இதனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பெண்களின் பிரதிநிதித்துவம் இதில் இல்லை.”

ஆரம்பத்தில் இருந்து இந்த செயலணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர்கள் முன்னிலையில் ஒக்டோபர் 15ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தாபிந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருவதில் மத்திய கிழக்குத் தொழிலாளர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் சுதந்திர வர்த்தக வலய ஆடைத் தொழிலாளர்கள், கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு முகங்கொடுத்து இரண்டாம் தர குடிமக்களாக ஊடகங்களால் பாகுபாடு காட்டப்பட்டதாகவும் சமிலா துஷாரி குற்றம் சாட்டியுள்ளார்.

பிராண்டிக்ஸ் “சுயாதீன விசாரணை” வேண்டாம்

பிராண்டிக்ஸில் வைரஸ் பரவுவது குறித்து சுயாதீன விசாரணையை நடத்துவதாக பிராண்டிக்ஸ் தலைவர் கூறிய விடயத்தை சுட்டிக்காட்டிய, தாபிந்து செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி அதனை நிராகரித்துள்ளார்.

“இந்த சுயாதீன விசாரணையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் இல்லாததால் அதில் வெளிப்படைத்தன்மை இல்லை. பின்னர் இந்த தொழிலாளர்கள் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து பல பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டனர், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை.”

தொழிலாளர் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் அங்கு பணியாற்றும் பெண் ஒருவர் எதிர்வரும் சுயாதீன விசாரணையை பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராண்டிக்ஸில் உயர் அதிகாரிகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அதே நிறுவனத்தில் தொழிலாளர்கள் அசுத்தமான, வசதிகள் இல்லாத இடங்களில் தங்க வைக்கப்பட்டு பாராபட்சம் காட்டப்பட்டுள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்த நாட்டின் குடிமக்களிடம் பாகுபாடு காட்டாதீர்கள். அந்நிய செலாவணியை சம்பாதித்த இந்த நாட்டின் பெண்கள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பாகும். எனவே பெண் தொழிலாளர் விடயத்தில், இதுபோன்ற பெண்களுக்கு பாகுபாடு காட்ட வேண்டாம்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுநோய் இரண்டாவது அலை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தினாலும், பாதிக்கப்பட்ட முதலாவது நபரைக் கண்டுபிடிக்க அதிகாரிகளால் இதுவரை முடியவில்லை. இந்நிலையில், கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்களை இராணுவம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Facebook Comments