கொழும்பு மாவட்டத்தில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்துவதை தடுக்கும் நோக்கில் இலங்கை ஜனாதிபதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தியுள்ளது, சுதந்திரமான ஒன்றுகூடலிற்கான ஐ நா சிறப்பு அறிக்கையாளரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
“#இலங்கை போராட்டங்கள்: பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடை செய்யும் வகையில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்க்ப்படுள்ளது குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன். #இலங்கை அதிகாரிகள் போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு உள்ள உரிமையை மதிக்க வேண்டும் & எவ்விதமான கட்டுப்பாடுகளும் நியாயப்படுத்தப்பட்டு, தேவையாகவும் & உரிய அளவிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ட் வூல் டிவிட்டரில் கூறியுள்ளார்.
நியூ யோர்க்கில் ஐ நா பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, கருத்துச் சுதந்திரம் `புனிதமானது` என்று கூறுபவர்கள், அது `அரசியல் சாசன வரைவுகளிற்குள்ளும்` மற்றும் `சட்டத்திற்கு உட்பட்டும்` இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்.