பிரதான ஊடகங்களால் போதியளவு விவாதிக்கப்படாத விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி கொழும்பு லயனல் வென்ட் கலை மையத்தில் இன்று முதல் இடம்பெறுகிறது.
“UNCOVER கண்காட்சியானது, மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம், நில அபகரிப்பு மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிஜ வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் மறைக்கப்பட்ட கதைகளையும் மலையக தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளையும் அம்பலப்படுத்தும்” என இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணியின் ‘எக்ட் நவ்’ (Act Now) பிரச்சாரம் தெரிவிக்கின்றது.
இரண்டாவது நாள் கண்காட்சியில், வடக்கு, கிழக்கில் நில அபகரிப்பு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளரும், ஊடகவியலாளருமான ஸ்ரீதரன் சோமீதரனால் உருவாக்கப்பட்ட ‘தாய்நிலம்’ ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறறவுள்ளது.
இறுதி நாளானஜூலை 8ஆம் திகதி மலையகத் தமிழ் சமூகத்திற்கு நீதி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஜூலை 5 மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெறும் விசேட அமர்வுகள் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.